செய்திகள்
கோப்புப் படம்

உத்தரகாண்ட் பனிச்சரிவில் சிக்கி 4 கடற்படை வீரர்கள் பலி

Published On 2021-10-02 17:41 GMT   |   Update On 2021-10-02 17:41 GMT
உத்தரகாண்டில் திரிசூல சிகரத்தில் ஏற்பட்ட பனிச்சரிவில் சிக்கி இந்திய கடற்படை வீரா்கள் 6 போ் மாயமாகினா்.
டேராடூன்:

உத்தரகாண்ட் மாநிலம் பாகேஷ்வர் மாவட்டத்தில் உள்ள திரிசூல சிகரத்தில் இந்திய கடற்படையைச் சோந்த 10 பேர் கொண்ட குழு மலையேற்றத்தில் ஈடுபட்டது.

கடந்த செப்டம்பர் 3-ம் தேதி மும்பையில் இருந்து புறப்பட்ட இந்த குழு நேற்று திரிசூல மலையில் ஏற முற்பட்டனர். அப்போது எதிர்பாராதவிதமாக 
பனிச்சரிவு ஏற்பட்டது.

இதையடுத்து பாதிக்கப்பட்டவர்களிடம் இருந்து கிடைத்த தகவலின் அடிப்படையில், இந்திய ராணுவம், இந்திய விமானப் படை மற்றும் மாநில பேரிடர் மீட்புப் படை உதவியுடன் தேடுதல் பணியில் ஈடுபட்டது. அதில் 5 வீரர்கள் பத்திரமாக மீட்கப்பட்டனர். மற்ற 5 வீரர்களும் மலையேற்ற உதவியாளரும் நேற்று காலை முதல் மாயமாயினர். எஞ்சிய வீரா்களையும் மலையேற்ற உதவியாளரையும் தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வந்தது.

இந்நிலையில், உத்தரகாண்ட் பனிச்சரிவில் இருந்து 4 கடற்படை வீரர்களின் உடல்கள் இன்று மீட்கப்பட்டு உள்ளது என மீட்புக்குழுவினர் தெரிவித்தனர். மாயமான 2 பேரை தேடும் பணி நடந்து வருகிறது.

Tags:    

Similar News