ஆன்மிகம்
கபிலேஸ்வரசாமி கோவிலில் வருடாந்திர பவித்ரோற்சவம்

கபிலேஸ்வரசாமி கோவிலில் வருடாந்திர பவித்ரோற்சவம்

Published On 2021-07-22 08:09 GMT   |   Update On 2021-07-22 08:09 GMT
திருப்பதி கபிலேஸ்வரசாமி கோவிலில் அதிகாரிகள், அர்ச்சகர்கள், பக்தர்கள் தெரிந்தும், தெரியாமலும் செய்த தவறுகளால் ஏற்படுகின்ற தோஷ நிவர்த்திக்காக பவித்ரோற்சவம் நடத்தப்படுகிறது.
திருப்பதி கபிலேஸ்வரசாமி கோவிலில் வருடாந்திர பவித்ரோற்சவம் 3 நாட்கள் நடக்கிறது. ஆண்டு முழுவதும் கோவிலில் பல்வேறு உற்சவங்கள் நடக்கிறது. அதில் அதிகாரிகள், அர்ச்சகர்கள், பக்தர்கள் தெரிந்தும், தெரியாமலும் செய்த தவறுகளால் ஏற்படுகின்ற தோஷ நிவர்த்திக்காக பவித்ரோற்சவம் நடத்தப்படுகிறது.

பவித்ரோற்சவத்தின் முதல் நாளான நேற்று காலை 9 மணியில் இருந்து காலை 10 மணி வரை பஞ்சமூர்த்திகளான விநாயகர், சுப்பிரமணியர், கபிலேஸ்வரசாமி, காமாட்சி தாயார், சண்டிகேஸ்வரசாமிக்கு மஞ்சள், சந்தனம், குங்குமம், பால், தயிர், தேன், விபூதி, இளநீர் ஆகிய சுகந்த திரவியங்களுடன் ஸ்நாபன திருமஞ்சனம், மாலை கலச பூஜை, ஹோமம், பவித்ரா பிரதிஷ்டை ஆகியவை நடந்தது.

பவித்ரோற்சவத்தில் கோவில் துணை அதிகாரி சுப்பிரமணியம், கண்காணிப்பாளர் பூபதி, கோவில் ஆய்வாளர்கள் ரெட்டிசேகர், சீனிவாசநாயக் ஆகியோர் கலந்து கொண்டனர்.
Tags:    

Similar News