செய்திகள்
கோப்புப்படம்

கொரோனாவுக்கு பெண் பலி - புதிதாக 172 பேருக்கு தொற்று

Published On 2021-06-18 02:30 GMT   |   Update On 2021-06-18 02:30 GMT
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 25 ஆயிரத்து 165-ல் இருந்து 25 ஆயிரத்து 337 ஆக உயர்ந்துள்ளது.
கள்ளக்குறிச்சி:

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் ஏற்கனவே 25 ஆயிரத்து 165 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் 23 ஆயிரத்து 52 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதுவரை 185 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர்.

இந்த நிலையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு கன்னியாகுமரி மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 63 வயதுடைய பெண் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதன் மூலம் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கொரோனா தொற்றால் இறந்தவர்களின் எண்ணிக்கை 186 ஆக உயர்ந்துள்ளது.

இந்த நிலையில் நேற்று 800 பேரின் கொரோனா பரிசோதனை முடிவு வெளியானது. இதில் 172 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது. இதன் மூலம் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 25 ஆயிரத்து 165-ல் இருந்து 25 ஆயிரத்து 337 ஆக உயர்ந்துள்ளது. கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை மற்றும் தனியார் மருத்துவமனைகளில் தற்போது 2 ஆயிரத்து 99 பேர் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
Tags:    

Similar News