செய்திகள்
செம்பரம்பாக்கம் ஏரி

பலத்த மழை - செம்பரம்பாக்கம் ஏரிக்கு 2 ஆயிரம் கனஅடி தண்ணீர் வருகிறது

Published On 2019-12-02 09:00 GMT   |   Update On 2019-12-02 09:00 GMT
கனமழை காரணமாக செம்பரம்பாக்கம், புழல், சோழவரம், பூண்டி ஏரிகளுக்கு தண்ணீர் வரத்து அதிகரித்து உள்ளது. செம்பரம்பாக்கம் ஏரிக்கு 2 ஆயிரம் கன அடி தண்ணீர் வந்து கொண்டு இருக்கிறது.
பூந்தமல்லி:

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் கடந்த 3 நாட்கள் இடைவிடாது பலத்த மழை கொட்டித் தீர்த்தது. இதனால் புறநகர் பகுதிகளான தாம்பரம், முடிச்சூர், பள்ளிக்கரணை உள்ளிட்ட இடங்களில் வீடுகளை மழை வெள்ளம் சூழ்ந்துள்ளது.

கனமழை காரணமாக சென்னைக்கு குடிநீர் வழங்கும் செம்பரம்பாக்கம், புழல், சோழவரம், பூண்டி ஏரிகளுக்கு தண்ணீர் வரத்து அதிகரித்து உள்ளது.

செம்பரம்பாக்கம் ஏரியின் கொள்ளளவு 3645 மில்லியன் கன அடி தற்போது 913 மில்லியன் கனஅடி தண்ணீர் உள்ளது.

கடந்த 29-ந் தேதி ஏரியின் நீர்மட்டம் 651 மில்லியன் கன அடியாக இருந்து கன மழை காரணமாக 3 நாட்களில் 262 மி.கன அடி தண்ணீர் அதிகரித்து உள்ளது.

செம்பரம்பாக்கம் ஏரியின் மொத்த உயரம் 24 அடி. தற்போது 11.20 அடி நீர்மட்டம் உள்ளது. ஏரிக்கு 2 ஆயிரம் கன அடி தண்ணீர் வந்து கொண்டு இருக்கிறது.

இதே போல் பூண்டி ஏரிக்கு 2925 கன அடி தண்ணீரும், சோழவரம் ஏரிக்கு 440 கன அடி தண்ணீரும், புழல் ஏரிக்கு 2161 கன அடி தண்ணீரும் வந்து கொண்டு இருக்கிறது.

Tags:    

Similar News