செய்திகள்
இலங்கை கிரிக்கெட்

பாகிஸ்தான் செல்ல மறுப்பு தெரிவித்த சீனியர் வீரர்கள்

Published On 2019-09-08 15:08 GMT   |   Update On 2019-09-08 15:08 GMT
பாகிஸ்தான் சென்று கிரிக்கெட் போட்டியில் விளையாட இலங்கையைச் சேர்ந்த முன்னணி வீரர்கள் மறுத்துள்ளதாக தெரிகிறது.
பாகிஸ்தான் கிரிக்கெட் போர்டின் தீவிர முயற்சியால் இலங்கை அணி பாகிஸ்தான் சென்று மூன்று டி20 மற்றும் மூன்று ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் விளையாட சம்மதம் தெரிவித்தது.

இலங்கை வீரர்களுக்கு முழு பாதுகாப்பு வழங்கப்படும் என்ற உறுதியின் அடிப்படையில் இலங்கை கிரிக்கெட் சங்கம் இதற்கு சம்மதம் தெரிவித்தது.

ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் கராச்சியில் செப்டம்பர் 27, 29 மற்றும் அக்டோபர் 2-ந்தேதிகளில் நடக்கிறது. டி20 கிரிக்கெட் போட்டிகளில் லாகூர் கடாபி மைதானத்தில் அக்டோபர் 5, 7 மற்றும் 9-ந்தேதிகளில் நடக்கிறது.

இந்தத் தொடரில் இலங்கை அணியின் சீனியர் வீரர்களான கருணாரத்னே, லசித் மலிங்கா, மேத்யூஸ் போன்றோர் பங்கேற்க தயக்கம் காட்டியுள்ளனர். பாதுகாப்பு காரணமாக அவர்களது குடும்பத்தினர் கவலை தெரிவித்திருப்பதால் அவர்கள் விரும்பவில்லை என்று கூறப்படுகிறது.

இதனால் முன்னணி வீரர்கள் பாகிஸ்தான் செல்வது கடினமே.
Tags:    

Similar News