ஆன்மிகம்
பட்டிவீரன்பட்டி கோவில்களில் குருப்பெயர்ச்சி விழா

பட்டிவீரன்பட்டி கோவில்களில் குருப்பெயர்ச்சி விழா

Published On 2020-11-17 07:17 GMT   |   Update On 2020-11-17 07:17 GMT
பட்டிவீரன்பட்டி பகுதியில் உள்ள கோவில்களில் குரு பெயர்ச்சி விழா நடைபெற்றது. இதையொட்டி குரு பகவானுக்கு சிறப்பு பூஜை மற்றும் அபிஷேக ஆராதனை நடைபெற்றது.
பட்டிவீரன்பட்டி பகுதியில் உள்ள கோவில்களில் குரு பெயர்ச்சி விழா நடைபெற்றது. இதையொட்டி குரு பகவானுக்கு சிறப்பு பூஜை மற்றும் அபிஷேக ஆராதனை நடைபெற்றது. அதன்படி, பட்டிவீரன்பட்டி அண்ணாநகர் நாகேஸ்வரி அம்மன் கோவில் வளாகத்தில் உள்ள குருபகவானுக்கு சிறப்பு யாக வேள்வி மற்றும் பூஜைகள் நடைபெற்றது. பின்னர் சிறப்பு அலங்காரத்தில் குருபகவான் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டனர். இதேபோல் அய்யம்பாளையத்தில் உள்ள அருள்முருகன் கோவிலில் குரு பகவானுக்கு யாக வேள்வி மற்றும் பூஜை நடைபெற்றது.

திண்டுக்கல் பாலகிருஷ்ணாபுரம் அருகே உள்ள ராஜீவ் நகரில் வினைதீர்க்கும் விநாயகர் கோவிலில் குருபெயர்ச்சியையொட்டி சிறப்பு யாகம் நடந்தது. இதைத்தொடர்ந்து குருபகவானுக்கு சிறப்பு அலங்காரத்தில் பக்தர் களுக்கு அருள்பாலித்தார். சிறுமணி நகரில் உள்ள விநாயகர் கோவிலும் குருபெயர்ச்சியையொட்டியாக பூஜைகள் நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டனர்.
Tags:    

Similar News