செய்திகள்
முக ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்த மக்கள் நீதி மய்யம் கட்சியினர்

மக்கள் நீதி மய்யம் கட்சியினர் 100 பேர் தி.மு.க.வில் இணைந்தனர்

Published On 2021-11-30 04:05 GMT   |   Update On 2021-11-30 04:05 GMT
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் மக்கள் நீதி மய்யம் கட்சியினர் 100 பேர் தி.மு.க.வில் இணைந்தனர்.
சென்னை:

மக்கள் நீதி மய்யம் கட்சியின் காஞ்சிபுரம் வடக்கு மாவட்ட செயலாளர் என்.முகேஷ்கண்ணா தலைமையில் தென் சென்னை மாவட்ட செயலாளர் ஆர்.பெருமாள், நகர செயலாளர்கள் அசோக் ஆனந்த், பிரபாகரன், கவுதம், கோபி, சண்முகம், வட்ட செயலாளர்கள் கோகுலகிருஷ்ணன், மணி, தரம்சிங், கந்தப்பழம், விகாஷ், கண்ணன், கோகுல், விக்னேஷ், சதீஷ்குமார் உள்பட 110-க்கும் மேற்பட்டோர் சென்னை அண்ணா அறிவாலயத்தில் தி.மு.க. தலைவரும், முதல்-அமைச்சருமான மு.க.ஸ்டாலினை சந்தித்து தங்களை தி.மு.க.வில் இணைத்துக்கொண்டனர்.

தி.மு.க.வில் இணைந்த மக்கள் நீதி மய்யம் கட்சி நிர்வாகிகளை மு.க.ஸ்டாலின் வரவேற்றார்.
Tags:    

Similar News