இந்தியா
அரிந்தம் பாக்சி

எந்த நாட்டுக்கும் பயண தடை இல்லை: வெளியுறவு அமைச்சகம் தகவல்

Published On 2021-12-03 01:47 GMT   |   Update On 2021-12-03 01:47 GMT
இந்தியாவில் ஒமிக்ரான் வைரஸ் உள்ளது என்ற எண்ணம் தவறானது. இந்தியா குறிப்பிட்ட எந்த நாட்டுக்கும் பயண தடை விதிக்கவில்லை என்று வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் அரிந்தம் பாக்சி தெரிவித்துள்ளார்.
புதுடெல்லி :

இந்தியாவில் புதிய வகை உருமாறிய கொரோனாவான ஒமைக்ரான் நுழைந்துள்ள நிலையில் டெல்லியில் நேற்று வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் அரிந்தம் பாக்சி பேட்டி அளித்தார்.

அப்போது அவர், “இந்தியாவில் 2 பேருக்கு ஒமைக்ரான் கண்டறியப்பட்டுள்ளது. இந்த நிலையில் இந்தியாவில் ஒமிக்ரான் வைரஸ் உள்ளது என்ற எண்ணம் தவறானது. இந்தியா குறிப்பிட்ட எந்த நாட்டுக்கும் பயண தடை விதிக்கவில்லை” என தெரிவித்தார்.
Tags:    

Similar News