செய்திகள்
வீடு புகுந்து கொள்ளை

அரியலூரில் வீடு புகுந்து கொள்ளை- வாலிபர் கைது

Published On 2020-01-11 12:17 GMT   |   Update On 2020-01-11 12:17 GMT
அரியலூரில் வீடு புகுந்து கொள்ளையடித்த வாலிபரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

அரியலூர்:

அரியலூர் மாவட்டம் காமராஜ் நகர் பகுதியை சேர்ந்தவர் வரதராஜன் (வயது 55). இவர் துபாயில் வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி வாசுகி (48). இவர்களுக்கு ஒரு மகன் , ஒரு மகள் உள்ளனர். இவர்களுக்கு சொந்தமாக காமராஜ் நகர் பகுதியில் ஒரு அடுக்குமாடி குடியிருப்பு உள்ளது. அதில் 6 வீடுகள், 3 கடைகளை வாடகைக்கு விட்டுள்ளனர்.

இதில் ஒரு வீட்டில் தனது மகள் மற்றும் மகனுடன் வாசுகி வசித்து வருகிறார். கடந்த 6-ந்தேதி வாசுகி சிதம்பரத்திற்கு சென்று விட்டார். இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தில் வீட்டில் இருந்த 20 பவுன் நகை ரூ.4 லட்சம் பணத்தை மர்மநபர்கள் கொள்ளையடித்து சென்று விட்டனர்.

இது குறித்து அரியலூர் போலீசார் விசாரணை நடத்தி, கொள்ளையில் ஈடுபட்ட அரியலூர் புதுமார்க்கெட் பகுதியை சேர்ந்த செந்தமிழ் செல்வன் (வயது 24) என்பவரை கைது செய்தனர்.

Tags:    

Similar News