செய்திகள்
தமிழக கவர்னரை இன்று மாலை சந்திக்கிறார் அண்ணாமலை
தமிழகத்தில் வழிபாட்டு தலங்களை அரசு திறக்காமல் இருப்பது உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகள் குறித்து கவர்னரிடம் அண்ணாமலை வலியுறுத்த உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
சென்னை:
இந்த நிலையில் தமிழக கவர்னர் ஆர்.என்.ரவியை அண்ணாமலை இன்று மாலை சந்திக்கிறார். கிண்டியில் உள்ள கவர்னர் மாளிகையில் இந்த சந்திப்பு இன்று மாலை 6 மணி அளவில் நடைபெறுகிறது.
அப்போது வழிபாட்டு தலங்களை தமிழக அரசு திறக்காமல் இருப்பது உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகள் குறித்து அவர் வலியுறுத்துகிறார் என்று கட்சி நிர்வாகி ஒருவர் தெரிவித்தார்.
தமிழகத்தில் வழிபாட்டு தலங்களை திறக்க வேண்டும் என்று பா.ஜ.க. மாநிலத் தலைவர் அண்ணாமலை தமிழக அரசை கண்டித்து சமீபத்தில் ஆர்ப்பாட்டம் நடத்தினார்.
இந்த நிலையில் தமிழக கவர்னர் ஆர்.என்.ரவியை அண்ணாமலை இன்று மாலை சந்திக்கிறார். கிண்டியில் உள்ள கவர்னர் மாளிகையில் இந்த சந்திப்பு இன்று மாலை 6 மணி அளவில் நடைபெறுகிறது.
அப்போது வழிபாட்டு தலங்களை தமிழக அரசு திறக்காமல் இருப்பது உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகள் குறித்து அவர் வலியுறுத்துகிறார் என்று கட்சி நிர்வாகி ஒருவர் தெரிவித்தார்.
கொரோனா தொற்று குறைந்து உள்ள நிலையில் பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டு இருந்த போதிலும் கோவில்களை மட்டும் தமிழக அரசு திறக்காமல் கட்டுப்பாடு விதித்திருப்பது குறித்து அவர் கவர்னரிடம் விவாதிக்க உள்ளதாக கூறப்படுகிறது.
இதையும் படியுங்கள்... என்னை மீறி, எனது மகனை தொண்டர்கள் அரசியலுக்கு அழைத்து செல்கின்றனர்- வைகோ