செய்திகள்
மின்சாரம் தாக்கி பலி

பேராவூரணி அருகே மின்சாரம் தாக்கி டிரைவர் பலி

Published On 2020-06-29 13:10 GMT   |   Update On 2020-06-29 13:10 GMT
பேராவூரணி அருகே மின்சாரம் தாக்கி டிரைவர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பேராவூரணி:

பேராவூரணி அருகே உள்ள செங்கமங்கலம் கிராமத்தில் கயிறு ஏற்றுமதி நிறுவனம் இயங்கி வருகிறது. இங்கு புதுக்கோட்டை மாவட்டம் மங்களநாடு பகுதியை சேர்ந்த முத்துவேல் (வயது45) என்பவர் டிரைவராக வேலை பார்த்து வந்தார். நேற்று முன்தினம் இரவு மழை பெய்து கொண்டிருந்தது.

அப்போது முத்துவேல், நிறுவனத்தில் கயிறு பித்து மூட்டைகளை அடுக்கி வைக்கும் பணியில் ஈடுபட்டிருந்தார். இந்த நிலையில் எதிர்பாராதவிதமாக அவரை மின்சாரம் தாக்கியது. இதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்து பேராவூரணி போலீசாரிடம் முத்துவேல் மனைவி மஞ்சுளா புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Tags:    

Similar News