செய்திகள்
தற்கொலை

திருவள்ளூர் அருகே இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை

Published On 2021-04-16 17:53 GMT   |   Update On 2021-04-16 17:53 GMT
திருவள்ளூர் அருகே கூடுதல் வரதட்சணை கேட்டு கொடுமை படுத்தியதால் இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
திருவள்ளூர்:

திருவள்ளூரை அடுத்த காக்களூர் வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பகுதியை சேர்ந்தவர் மகேஷ் (வயது 32). இவர் திருவள்ளூரில் ஏ.சி. மெக்கானிக்காக வேலை செய்து வருகிறார். சிவசத்யா (வயது 27) என்ற பெண்ணை கடந்த 2015-ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு 2 ஆண் குழந்தைகள் உள்ளனர். திருமணமான நாள் முதல் மகேஷ் மற்றும் அவரது வீட்டில் உள்ளவர்கள் கூடுதல் வரதட்சணை கேட்டு சிவசத்யாவை அடிக்கடி தொல்லை கொடுத்து அடித்து உதைத்து கொடுமை செய்து வந்தனர்.

இதனால் மனவேதனை அடைந்த அவர் தனது பெற்றோரிடம் இது சம்பந்தமாக அழுது புலம்பி வந்தார். இந்த நிலையில் நேற்று முன்தினம் கணவன்-மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டது.

இதில் மனவேதனை அடைந்த சிவசத்யா தன்னுடைய அறைக்கு சென்று தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து திருவள்ளூர் தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
Tags:    

Similar News