செய்திகள்
ஆம் ஆத்மி கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளராக கெஜ்ரிவால் 3-வது முறையாக தேர்வு
தேசிய ஒருங்கிணைப்பாளராக டெல்லி முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் மீண்டும் தேர்வு செய்யப்பட்டுள்ளார். அவர் 3வது முறையாக இந்த பதவிக்கு தேர்வாகி உள்ளார்.
புதுடெல்லி:
டெல்லியில் ஆம் ஆத்மி கட்சியின் தேசிய செயற்குழு கூட்டம் இன்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் அக்கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளராக டெல்லி முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் மீண்டும் தேர்வு செய்யப்பட்டுள்ளார். அவர் 3வது முறையாக இந்த பதவிக்கு தேர்வாகி உள்ளார்.
இந்த ஆண்டு தொடக்கத்தில் அக்கட்சியில், ஒருவர் 2 முறைக்கும் கூடுதலாக ஒரு பதவியை வகிப்பதற்கான சட்டதிருத்தம் மேற்கொள்ளப்பட்டது.
இதேபோன்று, 2 முறை தேசிய செயலாளராக பதவி வகித்த பங்கஜ் குப்தா மீண்டும் அந்த பதவிக்கு இன்று தேர்வு செய்யப்பட்டு உள்ளார்.
இதையும் படியுங்கள்...மாணவர்கள் யாரும் விபரீத முடிவுகளை எடுக்க வேண்டாம்- மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்