செய்திகள்
அரவிந்த் கெஜ்ரிவால்

ஆம் ஆத்மி கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளராக கெஜ்ரிவால் 3-வது முறையாக தேர்வு

Published On 2021-09-12 19:04 GMT   |   Update On 2021-09-12 19:04 GMT
தேசிய ஒருங்கிணைப்பாளராக டெல்லி முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் மீண்டும் தேர்வு செய்யப்பட்டுள்ளார். அவர் 3வது முறையாக இந்த பதவிக்கு தேர்வாகி உள்ளார்.
புதுடெல்லி:

டெல்லியில் ஆம் ஆத்மி கட்சியின் தேசிய செயற்குழு கூட்டம் இன்று நடைபெற்றது.  இந்த கூட்டத்தில் அக்கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளராக டெல்லி முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் மீண்டும் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.  அவர் 3வது முறையாக இந்த பதவிக்கு தேர்வாகி உள்ளார்.

இந்த ஆண்டு தொடக்கத்தில் அக்கட்சியில், ஒருவர் 2 முறைக்கும் கூடுதலாக ஒரு பதவியை வகிப்பதற்கான சட்டதிருத்தம் மேற்கொள்ளப்பட்டது.

இதேபோன்று, 2 முறை தேசிய செயலாளராக பதவி வகித்த பங்கஜ் குப்தா மீண்டும் அந்த பதவிக்கு இன்று தேர்வு செய்யப்பட்டு உள்ளார்.


Tags:    

Similar News