செய்திகள்

கருணாநிதி மறைவு: திருக்குவளையில் பெண்கள் கும்மியடித்து ஒப்பாரி

Published On 2018-08-08 09:42 GMT   |   Update On 2018-08-08 09:42 GMT
திருக்குவளையில் கருணாநிதியின் படத்தை கையில் ஏந்தி ஏராளமான ஆண்கள், பெண்கள் மற்றும் தி.மு.க. தொண்டர்கள் அஞ்சலி செலுத்தினர். #RIPKarunanidhi #Karunanidhi #DMK
நாகப்பட்டினம்:

தி.மு.க. தலைவர் கருணாநிதியின் சொந்த ஊர் நாகை மாவட்டம் திருக்குவளை ஆகும். இந்த ஊரில் கடந்த 1924-ம் ஆண்டு ஜூன் 3-ந் தேதி கருணாநிதி பிறந்தார்.

நேற்று மாலை கருணாநிதி மரணம் அடைந்த தகவல் வெளியானதும் அவரசு சொந்த ஊரான திருக்குவளை சோகத்தில் மூழ்கியது.

திருக்குவளையில் கருணாநிதியின் படத்தை கையில் ஏந்தி ஏராளமான ஆண்கள், பெண்கள் மற்றும் தி.மு.க. தொண்டர்கள் அஞ்சலி செலுத்தினர்.

திருக்குவளையில் உள்ள கருணாநிதியின் பிறந்த வீடு தற்போது நூலகமாக மாற்றி பராமரிக்கப்பட்டு வருகிறது. இன்று காலை ஏராளமான பெண்கள் நூலகம் முன்பு திரண்டு கும்மியடித்து ஒப்பாரி வைத்து பாடினர்.

மேலும் ஏராளமான தி.மு.க. நிர்வாகிகள், தொண்டர்கள் வந்திருந்து கருணாநிதியின் உருவப்படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.  #RIPKarunanidhi #Karunanidhi #DMK
Tags:    

Similar News