செய்திகள்
கோப்புபடம்

ஐ.எஸ்.எல்.கால்பந்து: சென்னையின் எப்.சி.அணி வெற்றிப்பாதைக்கு திரும்புமா? ஒடிசாவுடன் இன்று மோதல்

Published On 2021-01-10 07:43 GMT   |   Update On 2021-01-10 07:43 GMT
ஐ.எஸ்.எல்.கால்பந்து போட்டியில் இன்று நடக்கும் ஆட்டட்தில் சென்னை அணி ஒடிசாவை வீழ்த்தி 3-வது வெற்றியை பெறுமா? என்று ஆவலுடன் எதிர் பார்க்கப்படுகிறது.

கோவா:

11 அணிகள் பங்கேற்கும் 7-வது ஐ.எஸ்.எல். (இந்தியன் சூப்பர் லீக்) கால்பந்து போட்டி கோவாவில் நடைபெற்று வருகிறது.

2 முறை சாம்பியனான சென்னையின் எப்.சி. தொடக்க ஆட்டத்தில் 2-1 என்ற கோல் கணக்கில் ஜாம்செட்பூரை தோற்கடித்தது. கேரளா பிளாஸ்டர்சுடன் மோதிய 2-வது ஆட்டம் கோல் எதுவுமின்றி டிரா ஆனது.

3-வது போட்டியில் பெங்களூருவிடம் 0-1 என்ற கணக்கிலும், 4-வது ஆட்டத்தில் மும்பையுடன் 1-2 என்ற கணக்கிலும் தோற்றது. 5-வது போட்டி யில் கவுகாத்தி அணியுடன் கோல் எதுவுமின்றி டிரா செய்தது.

6-வது ஆட்டத்தில் கோவாவை 2-1 என்ற கணக்கில் வீழ்த்தியது. 7-வது போட்டியில் ஈஸ்ட் பெங்காலுடன் 2-2 என்ற கணக்கிலும், 8-வது ஆட்டத்தில் ஏ.டி.கே.மோகன் பாகனுடன் கோல் எதுவு மின்றியும் டிரா செய்தது. 9-வது ஆட்டத்தில் 1-4 என்ற கோல் கணக்கில் ஐதராபாத்திடம் தோற்றது.

சென்னையின் எப்.சி. 9 ஆட்டத்தில் விளையாடி 2 வெற்றி, 4 டிரா, 3 தோல்வியுடன் 10 புள்ளிகள் பெற்று 9-வது இடத்தில் உள்ளது.

சென்னையின் எப்.சி. 10-வது ஆட்டத்தில் ஒடிசா அணியை இன்று மாலை 5 மணிக்கு எதிர்கொள்கிறது.

சென்னை அணி ஒடிசாவை வீழ்த்தி 3-வது வெற்றியை பெறுமா? என்று ஆவலுடன் எதிர்பார்க்கப்படுகிறது. கோவாவுக்கு எதிரான 3 ஆட்டங்கள் விளையாடிய பிறகு சென்னை அணிக்கு வெற்றி கிடைக்கவில்லை. இதனால் வெற்றி பாதைக்கு திரும்புமா? என்ற எதிர்பார்ப்பு இருக்கிறது.

ஒடிசா அணி 9 ஆட்டத்தில் ஒரு வெற்றி, 2 டிரா, 6 தோல்வியுடன், 5 புள்ளிகள் பெற்று கடைசி இடத்தில் உள்ளது.

இன்று இரவு 7.30 மணிக்கு நடைபெறும் மற்றொரு ஆட்டத்தில் ஜாம்செட்பூர்- கேரளா பிளாஸ்டர் அணிகள் மோதுகின்றன.

மும்பை அணி 22 புள்ளியுடன் முதல் இடத்தில் உள்ளது. மோகன் பகான் 20 புள்ளியுடனும், ஐதராபாத், கோவா அணிகள் தலா 15 புள்ளிகளுடனும் அதற்கு அடுத்த நிலைகளில் உள்ளன.

Tags:    

Similar News