செய்திகள்
அரிவாள் வெட்டு (கோப்புப்படம்)

பூதலூரில் தேர்தல் முன்விரோத தகராறில் பெண் உள்பட 4 பேருக்கு அரிவாள் வெட்டு

Published On 2021-04-08 11:28 GMT   |   Update On 2021-04-08 11:28 GMT
பூதலூர் அருகே தேர்தல் முன்விரோத தகராறில் பெண் உள்பட 4 பேர் அரிவாளால் வெட்டப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பூதலூர்:

பூதலூர் அருகே உள்ள கோவில்பத்து கிராமத்தில் வசிப்பவர் பரஞ்சோதி (55) இவருக்கும் அதே தெருவில் வசிக்கும் விவேக் என்பவருக்கும் தேர்தல் நாளன்று வாக்குச்சாவடி அருகே தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

நேற்று இரவு விவேக் மற்றும் பரஞ்சோதி இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் விவேக் மற்றும் மணிமாறன் ஆகியோர் அரிவாளால் சரமாரியாக வெட்டியதில் பரஞ்சோதி, அவரது அண்ணன் திருநாவுக்கரசு, திருநாவுக்கரசின் மகள் மகாலட்சுமி, மகன் விக்னேஸ்வரன் ஆகியோர் படுகாயமடைந்தனர்.

காயமடைந்த 4 பேரும் தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். விவேக், மணிமாறன் ஆகியோரும் தஞ்சை மருத்துவ கல்லூரியில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். தகவலின் பேரில் பூதலூர் போலீசார் குவிக்கப்பட்டு தீவிர விசாரணை மேற்கொடுள்ளனர். விவேக், மணிமாறன் இரண்டு பேரும் பாரதிய ஜனதா கட்சியை சேர்ந்தவர்கள். காயமடைந்த பரஞ்சோதி தி.மு.க.வை சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
Tags:    

Similar News