செய்திகள்
கோப்பு படம்.

மறைமலைநகரில் பெண்ணிடம் 13 பவுன் நகை பறிப்பு

Published On 2021-04-26 12:21 GMT   |   Update On 2021-04-26 12:21 GMT
மறைமலைநகரில் இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த பெண்ணிடம் 13 பவுன் நகையை 2 பேர் பறித்து சென்றனர்.
வண்டலூர்:

செங்கல்பட்டு மாவட்டம் மறைமலைநகர் விஷ்ணுபிரியா நகர் பகுதியை சேர்ந்தவர் முத்துச்செல்வி (வயது 35), நேற்று முன்தினம் தனது மகனை அழைத்துக்கொண்டு ரெயில் நகர் வழியாக இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். திடீரென மோட்டார் சைக்கிளில் வந்த 2 நபர்கள் முத்துச்செல்வி அணிந்திருந்த 13 பவுன் தங்கச்சங்கிலியை பறித்துக்கொண்டு தப்பிச் சென்று விட்டனர்.

இது குறித்து முத்துச்செல்வி மறைமலைநகர் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து நகை பறிப்பில் ஈடுபட்ட வாலிபர்களை தேடி வருகின்றனர்.
Tags:    

Similar News