செய்திகள்
பட்டாசு ஆலை வெடிவிபத்து

சாத்தூர் அருகே பட்டாசு ஆலை வெடி விபத்தில் தொழிலாளி பலி

Published On 2021-07-15 09:42 GMT   |   Update On 2021-07-15 09:42 GMT
சாத்தூர் அருகே பட்டாசு ஆலை வெடி விபத்தில் பலத்த காயமடைந்த தொழிலாளி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
விருதுநகர்:

சிவகாசி பழனியாண்டவர் தெருவைச் சேர்ந்தவர் கதிரேசன் (வயது 70). இவர் சாத்தூர் அருகே சிந்நபள்ளி கிராமத்தில் பட்டாசு ஆலை நடத்தி வருகிறார். இங்கு பேன்சி ரக பட்டாசு வெடிகள் தயாரிக்கப்பட்டு வருகின்றன.

நேற்று வழக்கம் போல் ஊழியர்கள் பட்டாசு தயாரிக்கும் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது பட்டாசுகளுக்கு இடையே ஏற்பட்ட உராய்வு காரணமாக வெடி விபத்து ஏற்பட்டது.

இதில் இங்கு பணியாற்றிய சுந்தரகுடும்பன்பட்டியைச் சேர்ந்த முகேஷ் கண்ணன் (25) பலத்த காயமடைந்தார். அவரை உடனடியாக சிவகாசி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி முகேஷ் கண்ணன் பரிதாபமாக இறந்தார். இது குறித்து சாத்தூர் டவுண் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News