செய்திகள்
தற்கொலை

ஆற்காடு அருகே வாலிபர் தீக்குளித்து தற்கொலை

Published On 2021-04-22 12:09 GMT   |   Update On 2021-04-22 12:09 GMT
ஆற்காடு அருகே 30 வயது மதிக்கத்தக்க வாலிபர் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார். அவர் எந்த ஊரை சேர்ந்தவர் என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஆற்காடு:

ஆற்காட்டை அடுத்த மேல்விஷாரம் பகுதியில் பெட்ரோல் பங்க் உள்ளது. இந்த நிலையில் நேற்று காலை 30 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் பெட்ரோல் பங்கிற்கு வந்து பெட்ரோல் வாங்கியுள்ளார்.

பின்னர் சிறிது தூரம் சென்று பெட்ரோலை தனது உடலில் ஊற்றி தீ வைத்துக் கொண்டார். இதில், அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

இதுகுறித்து ஆற்காடு டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து, தற்கொலை செய்து கொண்ட வாலிபர் எந்த ஊரை சேர்ந்தவர் என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags:    

Similar News