செய்திகள்
கைது

மயிலாடுதுறையில் ஜவுளிக்கடையில் திருடிய ஊழியர் கைது

Published On 2019-11-15 10:35 GMT   |   Update On 2019-11-15 10:35 GMT
மயிலாடுதுறையில் ஜவுளிக்கடையில் திருடிய ஊழியரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மயிலாடுதுறை:

நாகை மாவட்டம், மயிலாடுதுறை கூறைநாடு புனுதீஸ்வரர் கோவில் வடக்கு வீதியை சேர்ந்தவர் வெங்கடேசன் (வயது 45). இவர் கூறைநாடு வண்டிக்காரத் தெருவில் ஜவுளிக்கடை நடத்தி வருகிறார்.

இவர் கடந்த 11-ந்தேதி இரவு கடையை பூட்டிவிட்டு சென்றுவிட்டார். நள்ளிரவு கடை ஜன்னல் கம்பிகளை அறுத்து உள்ளே புகுந்த கொள்ளையன் கடையில் வைக்கப்பட்டு இருந்த ரூ.2 லட்சத்து 80 ஆயிரத்தை கொள்ளையடித்து சென்று விட்டான். 12-ந்தேதி காலை கடையை திறக்கவந்த வெங்கடேசன் கடையில் வைத்திருந்த பணம் கொள்ளை போய் இருப்பதை அறிந்து அதிர்ச்சி அடைந்தார்.

இதுபற்றி அவர் மயிலாடுதுறை போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து ஜவுளிக்கடையில் உள்ள கண்காணிப்பு கேமிரா காட்சிகளை ஆய்வு செய்தனர். இதில் கடையில் திருடிய நபர் அதே கடையில் சில மாதங்களுக்கு முன்பு வேலை பார்த்தவர் என்று தெரியவந்தது. இதுதொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி கார்த்திக் என்பவரை கைது செய்தனர்.

கிருஷ்ணகிரி மாவட்டம், பர்கூரை சேர்ந்த செல்லையன் மகன் கார்த்திக் 3 மாதம் ஜவுளிக்கடையில் வேலை பார்த்துள்ளார். அதற்கான சம்பளம் கொடுக்கப்படவில்லை என்றும், உடல்நலம் பாதிக்கப்பட்டதால் அவரை வேலையைவிட்டு நிறுத்தி விட்டதாகவும், இதற்கு பாடம் கற்பிக்கும் வகையில் ஜவுளிக்கடைக்குள் புகுந்து பணத்தை திருடியதாக தெரிவித்துள்ளார். அவரிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News