செய்திகள்
கோவையில் கொரோனா பாதிப்புகள் குறித்து நேற்று மாலை மாநில சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள பட்டியலில் மாவட்டத்தில் மேலும் 220 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டது.
கோவை:
கோவையில் கொரோனா பாதிப்புகள் குறித்து நேற்று மாலை மாநில சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள பட்டியலில் மாவட்டத்தில் மேலும் 220 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டது. இதனால் மாவட்டத்தில் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்ட நபர்களின் மொத்த எண்ணிக்கை 2 லட்சத்து 26 ஆயிரத்து 869 ஆக உயர்ந்து உள்ளது. இது தவிர கோவையில் நேற்று ஒரே நாளில் 9,150 பேருக்கு கொரோனா மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டன.
கோவையில் நேற்று ஒரே நாளில் மட்டும் 4 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். இதனால் கொரோனா பாதிப்புகளால் உயிரிழந்தோரின் மொத்த எண்ணிக்கை 2,132 ஆக அதிகரித்து உள்ளது.
கொரோனாவிலிருந்து 391 பேர் நேற்று குணமடைந்தனர். அதன்படி மாவட்டத்தில் இதுவரை 2 லட்சத்து 21 ஆயிரத்து 810 பேர் சிகிச்சை முடிந்து குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். தற்போது 2,927 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
நீலகிரி மாவட்டத்தில் நேற்று புதிதாக 54 பேருக்கு கொரோனா வைரஸ் உறுதியானது. இதன் மூலம் தொற்று பாதிப்பு எண்ணிக்கை 29 ஆயிரத்து 864 ஆக உயர்ந்து உள்ளது. நேற்று 64 பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பினர். இதன் மூலம் இதுவரை 28 ஆயிரத்து 766 பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். தற்போது 916 பேர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.