செய்திகள்
திருப்பூரில் பெண்ணிடம் 3 பவுன் நகை பறிப்பு
திருப்பூரில் பெண்ணிடம் 3 பவுன் நகை பறிப்பு சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருப்பூர்:
திருப்பூர் 15 வேலம்பாளையத்தை அடுத்த நேரு வீதியை சேர்ந்தவர் துரைசாமி.
இவரது மனைவி விமலாமணி (வயது 59). இவர் அந்த பகுதியில் ரோட்டில் நடந்து சென்று கொண்டிருந்தார்.
அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம நபர்கள் 2 பேரில் பின்னால் உட்கார்ந்திருந்த நபர் திடீரென விமலாமணியின் நபர்கள் 2 பேரும் 3 பவுன் சங்கிலியுடன் கண் இமைக்கும் நேரத்தில் மோட்டார் சைக்கிளில் அங்கிருந்து தப்பிச் சென்றனர். அவர்கள் இருவரும் ஹெல்மெட் அணிந்திருந்தனர்.
இதுகுறித்து விமலாமணி 15 வேலம்பாளையம் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். இதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினார்கள்.