வழிபாடு
வியாக்ராபாதர், யானை வாகனங்களில் எழுந்தருளிய சோமஸ்கந்தமூர்த்தி

பிரம்மோற்சவ விழா: வியாக்ராபாதர், யானை வாகனங்களில் எழுந்தருளிய சோமஸ்கந்தமூர்த்தி

Published On 2022-02-28 08:11 GMT   |   Update On 2022-02-28 08:11 GMT
திருப்பதி கபிலேஸ்வரசாமி கோவிலில் வருடாந்திர பிரம்மோற்சவ விழாவின் 6-வது நாளில் சோமஸ்கந்தமூர்த்தி, காமாட்சி தாயார் வியாக்ராபாதர் வாகனத்தில் எழுந்தருளி அருள்பாலித்தனர்.
திருப்பதி கபிலேஸ்வரசாமி கோவிலில் வருடாந்திர பிரம்மோற்சவ விழா நடந்து வருகிறது. விழாவின் 6-வது நாளான நேற்று காலை 7 மணியில் இருந்து காலை 9 மணி வரை சோமஸ்கந்தமூர்த்தி, காமாட்சி தாயார் வியாக்ராபாதர் வாகனத்தில் எழுந்தருளி அருள்பாலித்தனர்.

அதைத்தொடர்ந்து இரவு 7 மணியில் இருந்து இரவு 9 மணிவரை யானை வாகனச் சேவை நடந்தது. அதில் சோமஸ்கந்தமூர்த்தி, எழுந்தருளி அருள் பாலித்தார். விழாவில் கோவில் அதிகாரிகள், அர்ச்சகர்கள் பலர் கலந்து கொண்டனர்.
Tags:    

Similar News