தொழில்நுட்பம்
ஏர்டெல்

ஒரே காலாண்டில் ரூ. 5 ஆயிரம் கோடி இழப்பை சந்தித்த ஏர்டெல்

Published On 2020-05-20 05:45 GMT   |   Update On 2020-05-20 05:48 GMT
2020 மார்ச் மாதம் வரையிலான காலாண்டில் ஏர்டெல் நிறுவனம் ரூ. 5237 கோடி இழப்பை சந்தித்துள்ளதாக தெரிவித்துள்ளது.



இந்தியாவில் முக்கிய தொலை தொடர்பு நிறுவனமான பார்தி ஏர்டெல் நிறுவனம் மார்ச் வரையிலான காலாண்டில் ரூ.5,237 கோடி இழப்பை சந்தித்துள்ளதாக தெரிவித்துள்ளது. 

கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் நிறுவனத்தின் வருமானம் ரூ.20,602 கோடியாக இருந்த நிலையில் ரூ.107 கோடி லாபம் ஈட்டியுள்ளது. ஆனால் இந்த ஆண்டு மார்ச் வரையிலான காலாண்டில் ரூ.23,722 கோடி வருமானம் கிடைத்தும், நிறுவனம் பெறும் இழப்பை சந்தித்துள்ளதாக தெரிவித்துள்ளது. 




கொரோனா பாதிப்பு அதிகம் நிலவும் இந்த காலகட்டத்தில், தொலைதொடர்பு நிறுவனங்கள் முக்கிய பங்கு வகிக்கும் நிலையில், அவற்றின் மீதான அதிகப்படியான வரிகள், கட்டணங்கள் சுமையை ஏற்படுத்துவதாகவும், அவற்றை குறைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
Tags:    

Similar News