ஆன்மிகம்
ஆத்தூர் உச்சினிமாகாளி அம்மன் கோவிலில் திருமால் பூஜை
ஆத்தூர் முடுக்கு தெரு உச்சினி மாகாளியம்மன் கோவிலில் விமான கலசங்களுக்கும், மூலவர் மற்றும் பரிவார தெய்வங்களுக்கும் சிறப்பு அபிஷேகம் நடந்தது.
ஆத்தூர் முடுக்கு தெரு உச்சினி மாகாளியம்மன் கோவிலில் திருமால் பூஜை நடைபெற்றது. இதனை முன்னிட்டு, காலையில் தாமிரபரணி ஆற்றில் இருந்து புனிதநீர் எடுத்து வரப்பட்டு யாகசாலை பூஜைகள் நடந்தது.
தொடர்ந்து விமான கலசங்களுக்கும், மூலவர் மற்றும் பரிவார தெய்வங்களுக்கும் சிறப்பு அபிஷேகம் நடந்தது. பின்னர் உச்சிகால பூஜை நடைபெற்றது. மாலையில் அம்மனுக்கு சிறப்பு அலங்கார தீபாராதனை நடந்தது.
கொரோனா தடுப்பு நடவடிக்கையாக, பக்தர்கள் பங்கேற்பின்றி விழா எளிமையாக நடந்தது.
தொடர்ந்து விமான கலசங்களுக்கும், மூலவர் மற்றும் பரிவார தெய்வங்களுக்கும் சிறப்பு அபிஷேகம் நடந்தது. பின்னர் உச்சிகால பூஜை நடைபெற்றது. மாலையில் அம்மனுக்கு சிறப்பு அலங்கார தீபாராதனை நடந்தது.
கொரோனா தடுப்பு நடவடிக்கையாக, பக்தர்கள் பங்கேற்பின்றி விழா எளிமையாக நடந்தது.