செய்திகள்
கொரோனா வைரஸ்

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கொரோனாவால் பெண்கள் உள்பட 5 பேர் பலி

Published On 2021-06-07 12:04 GMT   |   Update On 2021-06-07 12:04 GMT
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கொரோனாவால் 334 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 453 பேர் சிகிச்சையில் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.
கிருஷ்ணகிரி:

கிருஷ்ணகிரி அரசு ஆஸ்பத்திரியில் கொரோனா பாதிப்புடன் 45 வயது பெண், 38 வயது பெண், 50 வயது பெண், 55 வயது ஆண் ஆகியோரும், போச்சம்பள்ளி அரசு ஆஸ்பத்திரியில் 47 வயது பெண் ஆகியோர் கொரோனாவால் பாதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பெற்று வந்தனர். அவர்கள் சிகிச்சை பலனின்றி இறந்தனர். இதன் மூலம் மாவட்டத்தில் கொரோனாவுக்கு பலியானவர்களின் எண்ணிக்கை 229 ஆக உயர்ந்துள்ளது.

இதனிடையே நேற்று மாவட்டத்தில் கொரோனாவால் 334 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 453 பேர் சிகிச்சையில் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். மாவட்டத்தில் இதுவரை 35 ஆயிரத்து 141 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதில் 31 ஆயிரத்து 605 பேர் சிகிச்சையில் குணமடைந்துள்ளனர். 3 ஆயிரத்து 307 பேர் தற்போது சிகிச்சையில் உள்ளனர்.
Tags:    

Similar News