தமிழ்நாடு
கொரோனா வைரஸ்

நீலகிரியில் கொரோனா நோய் தொற்று பரவல் 9 சதவீதமாக அதிகரிப்பு

Published On 2022-01-12 04:02 GMT   |   Update On 2022-01-12 04:02 GMT
ஊட்டி புதுமந்து போலீஸ் குடியிருப்பில் உள்ள 5 போலீசார் உள்பட 8 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. தற்போது அவர்கள் ஆஸ்பத்திரிகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
ஊட்டி:

நீலகிரியில் கடந்த சில தினங்களாக கொரோனா தொற்றால் பாதிக்கப்படுபவர்கள் எண்ணிக்கை அதிகரித்த வண்ணம் உள்ளது. நேற்று ஒரே நாளில் 121 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

ஒரே தெரு அல்லது பகுதியில் 3 பேருக்கு தொற்று உறுதியானால் அந்த பகுதி கட்டுப்பாட்டு பகுதியாக அறிவிக்கப்பட்டு கண்காணிக்கப்படுகிறது.

தற்போது வரை ஊட்டியில் 16 இடங்கள் கட்டுப்பாட்டு பகுதிகளாக அறிவிக்கப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டு இருக்கிறது. அந்த பகுதிகளில் தினந்தோறும் சுகாதார பணிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

ஊட்டி புதுமந்து போலீஸ் குடியிருப்பில் உள்ள 5 போலீசார் உள்பட 8 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. தற்போது அவர்கள் ஆஸ்பத்திரிகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

8 பேருக்கு கொரோனா உறுதியானதை அடுத்து போலீஸ் குடியிருப்பில் வசிக்க கூடிய 50 பேரிடம் இருந்து ரத்த மாதிரிகள் சேகரிக்கப்பட்டு பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளது.

அந்த முடிவுகள் விரைவில் வர உள்ளது. மேலும் அந்த பகுதியை தனிமைப்படுத்தி தடுப்புகள் வைத்து அடைக்கப்பட்டு, கிருமி நாசினியும் தெளிக்கப்பட்டது.

இதுகுறித்து சுகாதார பணிகள் துணை இயக்குனர் பாலுசாமி கூறியதாவது:-

நீலகிரியில் கொரோனா பாதிப்பு உறுதியாகி லேசான அறிகுறிகளுடன் உள்ள 173 பேர் வீட்டு தனிமையில் உள்ளனர். வெளிநாடுகளில் இருந்து நீலகிரி திரும்பிய 121 பேர் 7 நாட்கள் தனிமைப்படுத்தி கண்காணிக்கப்பட்டு வருகின்றனர்.

இதில் 32 பேர் தவிர்த்து மீதமுள்ள அனைவருக்கும் 8-வது நாள் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதில் தொற்று இல்லை என்பது தெரியவந்தது.

தற்போது நோய்பரவல் அதிகமாக உள்ளதால் தினமும் 1,500 பேருக்கு பரிசோதனை செய்யப்படுகிறது. நீலகிரியில் கடந்த சில நாட்களுக்கு முன்பு கொரோனா பரவல் 0.6 சதவீதமாக இருந்தது. தற்போது 9 சதவீதமாக அதிகரித்துள்ளது. அடுத்தமாதம் தொற்று பாதிப்பு அதிகமாக இருக்கும்.

இவ்வாறு அவர் கூறினார்.
Tags:    

Similar News