செய்திகள்
கைது

திருத்தணி வாலிபர் கொலை: குண்டர் சட்டத்தில் 3 பேர் கைது

Published On 2019-11-05 07:04 GMT   |   Update On 2019-11-05 07:04 GMT
திருத்தணி வாலிபர் கொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து 3 பேரை போலீசார் குண்டர் சட்டத்தில் கைது செய்தனர்.

சென்னை:

திருத்தணியில் கடந்த 16.8.2019 அன்று மகேஷ் என்பவரை மர்ம கும்பல் வெட்டி கொலை செய்தது.

இந்த வழக்கில் விமல்ராஜ், அஜித்குமார், ராஜ்குமார், கோபிராஜ் ஆகிய 4 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

இந்த நிலையில் திருவள்ளூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்ட் அரவிந்தன் பரிந்துரையின்பேரில் திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் மகேஸ்வரியின் உத்தரவின் படி கொலை வழக்கில் கைதான விமல்ராஜ், கோபிராஜ் மற்றும் அஜித்குமார் ஆகிய 3 பேர் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டனர்.

Tags:    

Similar News