செய்திகள்

ரூ.10 ஆயிரத்துக்கு விற்கப்பட்ட விதவை பெண்ணை கற்பழித்த கும்பல்

Published On 2019-05-13 09:13 GMT   |   Update On 2019-05-13 09:13 GMT
உத்தரபிரதேச மாநிலத்தில் ரூ.10 ஆயிரத்துக்கு விற்கப்பட்ட விதவை பெண் பல முறை கற்பழிக்கப்பட்ட கொடூர சம்பவம் நிகழ்ந்து உள்ளது.
மீரட்:

உத்தரபிரதேச மாநிலம் ஹாபூர் பகுதியை சேர்ந்த இளம்பெண் கணவரின் மறைவுக்கு பின் அந்த பெண்ணை அவரது தந்தையும், சித்தியும் ரூ.10 ஆயிரத்துக்கு விற்றனர்.

விதவை பெண்ணை ரூ.10 ஆயிரத்துக்கு வாங்கியவர் தனது நண்பர்கள் உள்பட பல்வேறு நபர்களிடம் கடன் வாங்கி கொண்டு வீட்டு வேலை உள்பட பல்வேறு பணிகளுக்கு அனுப்பி வைத்தார்.

வீட்டு வேலைக்கு சென்ற விதவை பெண்ணை அங்குள்ள கும்பல் கற்பழித்தது. பல முறை அவர் கற்பழிக்கப்பட்டு கடுமையான சித்ரவதை செய்யப்பட்டு உள்ளார்.

இந்த கற்பழிப்பு தொடர்பாக அந்த பெண் ஹாபூர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். ஆனால் போலீசார் அவரது புகார் மீது எந்த நடவடிக்கையும் எடுக்க மறுத்துவிட்டனர்.

இதனால் அந்த பெண் தீக்குளித்து தற்கொலைக்கு முயன்றார். 80 சதவீத தீக்காயங்களுடன் டெல்லியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டு உள்ளார்.

இது தொடர்பாக டெல்லி மகளிர்ஆணையம் அளித்த புகாரின் பேரில் ஹாபூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு நடவடிக்கை எடுத்துள்ளார். 14 பேர் மீது வழக்குப் பதிவு செய்து விசாரணை நடந்து வருகிறது.
Tags:    

Similar News