ஆன்மிகம்
பத்ரகாளியம்மன்

குமாரபாளையம் பத்ரகாளியம்மன் கோவிலில் பூச்சாட்டுதலுடன் திருவிழா தொடங்கியது

Published On 2021-02-19 08:39 GMT   |   Update On 2021-02-19 08:39 GMT
குமாரபாளையம் அருகே கோட்டைமேடு பத்ரகாளியம்மன், மாரியம்மன், பட்டத்தரசியம்மன், அன்னபூரணி சமேத கைலாசநாதர், பூதேவி, ஸ்ரீதேவி, உடனமர் தாமோதர பெருமாள் கோவில் திருக்கல்யாண உற்சவம் உள்ளிட்ட திருவிழா பூச்சாட்டுதலுடன் தொடங்கியது.
குமாரபாளையம் அருகே கோட்டைமேடு பத்ரகாளியம்மன், மாரியம்மன், பட்டத்தரசியம்மன், அன்னபூரணி சமேத கைலாசநாதர், பூதேவி, ஸ்ரீதேவி, உடனமர் தாமோதர பெருமாள் கோவில் திருக்கல்யாண உற்சவம் உள்ளிட்ட திருவிழா பூச்சாட்டுதலுடன் தொடங்கியது.

விழாவில் நேற்று முன்தினம் இரவு கோட்டைமேடு பட்டத்தரசியம்மன் கோவிலில் அபிஷேகம், பூஜை நடத்தப்பட்டு, பொங்கலிட்டு பத்ரகாளியம்மன், மாரியம்மன் கோவிலில் பூச்சாட்டுதல் நடைபெற்றது. வருகிற 22-ந் தேதி மாரியம்மன் கோவிலில் கம்பம் நடுதலும், 27-ந் தேதி மாரியம்மன் கோவிலில் பூவோடு எடுத்தலும் நடக்கிறது.

பின்னர் மார்ச் 3-ந் தேதி பூவோடு இறக்குதல், அதே நாளில் காவிரி ஆற்றில் இருந்து மலர்களால் அலங்கரிக்கபட்ட ரதத்தில் அம்மன் சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தவாறு வர தீர்த்தக்குடங்கள் எடுத்து வருதல், சாமிகளுக்கு சிறப்பு அபிஷேகம், பூஜை செய்தலும், முப்பாட்டு பொங்கலிடுதல், அதே நாளில் திருக்கல்யாண வைபோகம், கூத்தாண்டவர் அழைத்தல், கம்பம் அகற்றுதல் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன. இதையொட்டி நேர்த்திக்கடன் செலுத்துபவர்கள் மஞ்சள் ஆடையணிந்தவாறு நேற்று முதல் விரதத்தை தொடங்கினர்.
Tags:    

Similar News