செய்திகள்
சீமான்

உள்ளாட்சி தேர்தல்: நாம் தமிழர் கட்சி வேட்பாளர்கள் மிரட்டப்படுகிறார்கள்- சீமான் பேட்டி

Published On 2021-09-27 12:15 GMT   |   Update On 2021-09-27 15:32 GMT
5 வருடம் கழித்து பார்த்தால் தி.மு.க. தேர்தல் அறிக்கை வெற்று அறிக்கை என்பது தெரியவரும் என்று சீமான் கூறியுள்ளார்.

சென்னை:

நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் நிருபர்களிடம் கூறியதாவது:-

உள்ளாட்சி தேர்தலில் நாம் தமிழர் வேட்பாளர்கள் மிரட்டப்படுகிறார்கள், பேரம் பேசப்படுகிறார்கள். பெட்ரோல் விலையை குறைச்ச தி.மு.க. அரசு டீசல் விலையை குறைக்கவில்லை. டீசல் விலை குறையாமல் அத்தியாவசிய பொருட்களின் அடக்கவிலை எப்படி குறையும்.

 5 வருடம் கழித்து பார்த்தால் தி.மு.க. தேர்தல் அறிக்கை வெற்று அறிக்கை என்பது தெரியவரும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News