செய்திகள்
முன்விரோதத்தில் கணவன்-மனைவி மீது தாக்குதல்: விவசாயி கைது
வேதாரண்யம் அருகே முன்விரோதத்தில் கணவன்-மனைவியை தாக்கிய விவசாயியை போலீசார் கைது செய்துள்ளனர்.
வேதாரண்யம்:
வேதாரண்யம் அருகே செம்போடை வடக்கு கிராமத்தை சேர்ந்தவர் ஆறுமுகம் (வயது 50) இவருக்கும், அதே ஊரை சேர்ந்த இவரது உறவினர் விவசாயி அஞ்சப்பன் (63) என்பவருக்கும் இடையே சொத்து பிரச்சினையால் முன்விரோதம் இருந்து வந்துள்ளது.
இந்தநிலையில் சம்பவத்தன்று ஆறுமுகம் மற்றும் அவருடைய மனைவி ராஜசெல்வி (45) ஆகியோர் தங்களின் மாந்தோப்பில் வேலை பார்த்து கொண்டு இருந்துள்ளனர். அப்போது அங்கு வந்த அஞ்சப்பன் மற்றும் அவருடைய மகன் வெங்கடேசன் ஆகிய 2 பேரும் சேர்ந்து ஆறுமுகத்தையும், அவரது மனைவியையும் தரக்குறைவாக பேசி, கத்தியை காட்டி கொலை மிரட்டல் விடுத்ததுடன், கம்பாலும், கம்பியாலும் தாக்கினர்.
இதில் காயம் அடைந்த ஆறுமுகம், அவருடைய மனைவி ராஜசெல்வி ஆகியோர் வேதாரண்யம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இதுகுறித்து ஆறுமுகம் அளித்த புகாரின் பேரில் வேதாரண்யம் போலீஸ் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் மதியழகன் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து அஞ்சப்பனை கைது செய்து, வேதாரண்யம் கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். இதில் தலைமறைவான வெங்கடேசனை வலைவீசி தேடி வருகிறார்கள்.
வேதாரண்யம் அருகே செம்போடை வடக்கு கிராமத்தை சேர்ந்தவர் ஆறுமுகம் (வயது 50) இவருக்கும், அதே ஊரை சேர்ந்த இவரது உறவினர் விவசாயி அஞ்சப்பன் (63) என்பவருக்கும் இடையே சொத்து பிரச்சினையால் முன்விரோதம் இருந்து வந்துள்ளது.
இந்தநிலையில் சம்பவத்தன்று ஆறுமுகம் மற்றும் அவருடைய மனைவி ராஜசெல்வி (45) ஆகியோர் தங்களின் மாந்தோப்பில் வேலை பார்த்து கொண்டு இருந்துள்ளனர். அப்போது அங்கு வந்த அஞ்சப்பன் மற்றும் அவருடைய மகன் வெங்கடேசன் ஆகிய 2 பேரும் சேர்ந்து ஆறுமுகத்தையும், அவரது மனைவியையும் தரக்குறைவாக பேசி, கத்தியை காட்டி கொலை மிரட்டல் விடுத்ததுடன், கம்பாலும், கம்பியாலும் தாக்கினர்.
இதில் காயம் அடைந்த ஆறுமுகம், அவருடைய மனைவி ராஜசெல்வி ஆகியோர் வேதாரண்யம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இதுகுறித்து ஆறுமுகம் அளித்த புகாரின் பேரில் வேதாரண்யம் போலீஸ் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் மதியழகன் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து அஞ்சப்பனை கைது செய்து, வேதாரண்யம் கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். இதில் தலைமறைவான வெங்கடேசனை வலைவீசி தேடி வருகிறார்கள்.