செய்திகள்
கொரோனா வைரஸ்

புதுக்கோட்டை மாவட்டத்தில் புதிதாக 193 பேருக்கு கொரோனா தொற்று

Published On 2021-06-09 11:52 GMT   |   Update On 2021-06-09 11:52 GMT
புதுக்கோட்டை மாவட்டத்தில் புதிதாக 193 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது.
புதுக்கோட்டை:

தமிழக அரசின் சார்பில் நேற்று வெளியிடப்பட்ட பட்டியலில் புதுக்கோட்டை மாவட்டத்தில் புதிதாக 193 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி இருந்தது. இதனால் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 24 ஆயிரத்து 811 ஆக அதிகரித்துள்ளது.

கொரோனா சிகிச்சையில் இருந்து 311 பேர் குணமடைந்து வீடு திரும்பினர். இதனால் `டிஸ்சார்ஜ்' ஆனவர்களின எண்ணிக்கை 22 ஆயிரத்து 276 ஆக உயர்ந்தது. கொரோனாவுக்கு தற்போது 2 ஆயிரத்து 284 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்த நிலையில் மாவட்டத்தில் கொரோனாவுக்கு மேலும் 4 பேர் இறந்தனர். இதனால் மாவட்டத்தில் கொரோனாவுக்கு இறப்பு எண்ணிக்கை 251 ஆக உயர்ந்தது.

ஆதனக்கோட்டை சுகாதார நிலைய வட்டாரத்திற்குட்பட்ட பகுதிகளில் நேற்று புதிதாக 3 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டது.
Tags:    

Similar News