வழிபாடு
புனித அந்தோணியார் ஆலய திருவிழா

கடையம் அருகே புனித அந்தோணியார் ஆலய திருவிழா

Published On 2022-02-21 04:13 GMT   |   Update On 2022-02-21 04:13 GMT
கடையம் அருக கருத்தப்பிள்ளையூர் புனித அந்தோணியார் ஆலயத்திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியாக நற்செய்தி பெருவிழா நடைபெற்றது. விழாவில் திரளானவர்கள் கலந்துகொண்டனர்.
கடையம் அருக கருத்தப்பிள்ளையூர் புனித அந்தோணியார் ஆலயத்திருவிழா கடந்த 10-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி தினமும் திருப்பலி, நற்கருணை ஆசீர் ஆகியன நடைபெற்றது.

விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக நற்செய்தி பெருவிழா நடைபெற்றது. வீரவநல்லூர் பங்குத்தந்தை ஆரோக்கியராஜ் நற்செய்தி வாசித்தார். தொடர்ந்து அருட்தந்தை ஸ்டீபன் திருப்பலியை நடத்தினார்.

இவரோடு கருத்தப்பிள்ளையூர் பங்குத்தந்தை வினோத் பால்ராஜ் இணைந்து நடத்தினார். விழாவில் திரளானவர்கள் கலந்துகொண்டனர்.
Tags:    

Similar News