லைஃப்ஸ்டைல்
ஆரோக்கிய பிரசவத்துக்கு உதவும் நார்ச்சத்து
கர்ப்பிணிகள் நார்ச்சத்து மிக்க உணவுகளை டயட் மூலம் கடைப்பிடித்து வந்தால் ஆரோக்கிய பிரசவத்திற்கு வழிவகுக்கும் என்று புதிய ஆய்வில் தெரியவந்துள்ளது.
மருத்துவ வசதிகள், தொழில்நுட்பங்கள் அதிகரித்து வந்தாலும் இயற்கை பிரசவங்கள் குறைந்து வருகின்றன. சிசேரியன் அறுவைச்சிகிச்சை மூலம் குழந்தை பெற்றெடுப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இந்த நிலையில் நார்ச்சத்து மிக்க உணவுகளை டயட் மூலம் கடைப்பிடித்து வந்தால் ஆரோக்கிய பிரசவத்திற்கு வழிவகுக்கும் என்று புதிய ஆய்வில் தெரியவந்துள்ளது.
தாவர உணவுகளில் நார்ச்சத்து அதிகம் உள்ளது. இது குடல் பாக்டீரியாக்களிடம் இருந்து நோய்எதிர்ப்பு மண்டலத்தை ஆரோக்கியப்படுத்துகிறது. எனவே இதை கர்ப்பிணி பெண்கள் உணவுப்பழக்கத்தில் சேர்த்துக் கொள்வது தாய்-சேய் இருவரின் ஆரோக்கியத்திற்கு உதவுவதுடன், பிரசவம் இயல்பாக நடைபெறவும் துணை செய்யும் என்று தெரியவந்துள்ளது.
ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த சிட்னி பல்கலைக்கழக ஆய்வுக்குழு இதை கண்டுபிடித்துள்ளது. “இயற்கை உணவான பெரும்பாலான தாவர உணவுகள் நார்ச்சத்துமிக்கவை. இவற்றை அளவாக சாப்பிட்டு வந்தால் எல்லாவகை ஆரோக்கியமும் கிடைக்கும். வலுவான நோய்எதிர்ப்பு மண்டலத்தை உருவாக்கும். இதுவே எதிர்கால நோய்களைத் தடுக்கும் சரியான தற்காப்பு நடவடிக்கையாகவும் அமையும்” என்கிறது ஆய்வுக்குழு.
தாவர உணவுகளில் நார்ச்சத்து அதிகம் உள்ளது. இது குடல் பாக்டீரியாக்களிடம் இருந்து நோய்எதிர்ப்பு மண்டலத்தை ஆரோக்கியப்படுத்துகிறது. எனவே இதை கர்ப்பிணி பெண்கள் உணவுப்பழக்கத்தில் சேர்த்துக் கொள்வது தாய்-சேய் இருவரின் ஆரோக்கியத்திற்கு உதவுவதுடன், பிரசவம் இயல்பாக நடைபெறவும் துணை செய்யும் என்று தெரியவந்துள்ளது.
ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த சிட்னி பல்கலைக்கழக ஆய்வுக்குழு இதை கண்டுபிடித்துள்ளது. “இயற்கை உணவான பெரும்பாலான தாவர உணவுகள் நார்ச்சத்துமிக்கவை. இவற்றை அளவாக சாப்பிட்டு வந்தால் எல்லாவகை ஆரோக்கியமும் கிடைக்கும். வலுவான நோய்எதிர்ப்பு மண்டலத்தை உருவாக்கும். இதுவே எதிர்கால நோய்களைத் தடுக்கும் சரியான தற்காப்பு நடவடிக்கையாகவும் அமையும்” என்கிறது ஆய்வுக்குழு.