உள்ளூர் செய்திகள்
பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகளுக்கு ஓவியப்போட்டி-தென்காசி கலெக்டர் பரிசு வழங்கினார்
பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகளுக்கு ஓவியப்போட்டி நடைபெற்றது. இதில் வெற்றி பெற்றவர்களுக்கு தென்காசி கலெக்டர் கோபாலசுந்தரராஜ் பரிசு வழங்கினார்.
தென்காசி:
தமிழ் இணையக் கல்விக் கழகத்தால் மாநில அளவில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு என குறளோவியம் என்ற பெயரில் ஓவியப்போட்டி நடைபெற்றது. இப்போட்டியில் 365 சிறந்த ஓவியங்கள் தேர்வு செய்யப்பட்டு போட்டியில் வெற்றி பெற்று முதல் 3 இடங்களை பெற்ற பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு முதல்-அமைச்்சரால் வழங்கப்பட்டன.
அதனைத்தொடர்ந்து தென்காசி மாவட்ட கலெக்டர் கூட்டரங்கில் நேற்று ஊக்கப்பரிசுக்காக தேர்வு செய்யப்பட்ட இலஞ்சி ராமசாமி பிள்ளை உயர்நிலைப்பள்ளி மாணவியர் பூர்ணிமா, நிலோபர், சுரேகா, வியாசா கலை மற்றும் அறிவியல் பெண்கள் கல்லூரி மாணவி சாரா பானு ஆகியோருக்கு சான்றிதழ்கள் மற்றும் தலா ரூ.1000 ஊக்கப்பரிசுத் தொகைக்கான காசோலைகளையும் தென்காசி மாவட்ட கலெக்டர் கோபாலசுந்தரராஜ் வழங்கினார்.
தமிழ் இணையக் கல்விக் கழகத்தால் மாநில அளவில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு என குறளோவியம் என்ற பெயரில் ஓவியப்போட்டி நடைபெற்றது. இப்போட்டியில் 365 சிறந்த ஓவியங்கள் தேர்வு செய்யப்பட்டு போட்டியில் வெற்றி பெற்று முதல் 3 இடங்களை பெற்ற பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு முதல்-அமைச்்சரால் வழங்கப்பட்டன.
அதனைத்தொடர்ந்து தென்காசி மாவட்ட கலெக்டர் கூட்டரங்கில் நேற்று ஊக்கப்பரிசுக்காக தேர்வு செய்யப்பட்ட இலஞ்சி ராமசாமி பிள்ளை உயர்நிலைப்பள்ளி மாணவியர் பூர்ணிமா, நிலோபர், சுரேகா, வியாசா கலை மற்றும் அறிவியல் பெண்கள் கல்லூரி மாணவி சாரா பானு ஆகியோருக்கு சான்றிதழ்கள் மற்றும் தலா ரூ.1000 ஊக்கப்பரிசுத் தொகைக்கான காசோலைகளையும் தென்காசி மாவட்ட கலெக்டர் கோபாலசுந்தரராஜ் வழங்கினார்.