செய்திகள்
மின்தடை

திருப்பூரில் நாளை மின்தடை

Published On 2021-02-22 13:51 GMT   |   Update On 2021-02-22 13:51 GMT
திருப்பூரில் நாளை பராமரிப்பு பணி நடைபெற உள்ளதால் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்தடை செய்யப்படுகிறது.
திருப்பூர்:

திருப்பூர் துணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் நாளை (செவ்வாய்க்கிழமை) இந்த துணை மின் நிலையத்தில் மின்சாரம் தடை செய்யப்படுகிறது.

அதன்படி நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை இந்த துணை மின் நிலையத்துக்குட்பட்ட அவினாசி ரோடு, புஷ்பா தியேட்டர், காலேஜ் ரோடு, ஓடக்காடு, பங்களா ஸ்டாப், காவேரி வீதி, ஸ்டேன்ஸ் வீதி, ஹவுசிங் யூனிட், முத்துசாமி வீதி விரிவு, கே.ஆர்.இ.லேஅவுட், எஸ்.ஆர்.நகர் வடக்கு, நேதாஜி வீதி, குமரன் வீதி, பாத்திமா நகர், டெலிபோன் காலனி, வித்யா நகர், எம்.ஜி.ஆர். நகர், பாரதி நகர், வளையங்காடு, முருங்கப்பாளைம், மாஸ்கோ நகர், காமாட்சிபுரம், பூத்தார் தியேட்டர் பகுதி, சாமுண்டிபுரம், லட்சுமி தியேட்டர் ஏரியா, கல்லம்பாளையம், எஸ்.ஏ.பி. தியேட்டர் ஏரியா, ஆசர் நகர், நாராயணசாமி நகர், காந்தி நகர், டி.டி.பி. மில்லின் ஒரு பகுதி, சாமிநாதபுரம், பத்மாவதி புரம், அண்ணா காலனி, ஜீவா காலனி, அங்கேரிபாளையம் ரோடு மற்றும் சிங்கார வேலன் நகர் ஆகிய பகுதிகளில் மின் வினியோகம் இருக்காது.

இந்த தகவலை மின்வாரிய செயற்பொறியாளர் சந்திரசேகரன் தெரிவித்துள்ளார்.
Tags:    

Similar News