செய்திகள்
கைது

பூதலூரில் மது விற்றவர் கைது

Published On 2021-07-24 12:30 GMT   |   Update On 2021-07-24 12:30 GMT
பூதலூரில் மது விற்றவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருக்காட்டுப்பள்ளி:

பூதலூர் அகிலாண்டேஸ்வரி நகர் பகுதியில் மது விற்பனை நடைபெறுவதாக போலீசுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதன்பேரில் பூதலூர் போலீசார் அந்த பகுதியில் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். சோதனையில் அகிலாண்டேஸ்வரி நகர் பகுதியில் வசிக்கும் பாக்கியராஜ் (வயது33) மது பாட்டில்களை பதுக்கி வைத்து விற்பனை செய்தது தெரிய வந்தது. அவரை கைது செய்த போலீசார் 100 மதுபாட்டில்களை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Tags:    

Similar News