செய்திகள்
மு.க.ஸ்டாலின்

சந்திக்க முயற்சிப்பதோ, வரவேற்பு அலங்காரம் அமைக்கவோ கூடாது- தொண்டர்களுக்கு மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்

Published On 2021-06-10 11:02 GMT   |   Update On 2021-06-10 11:02 GMT
தமிழக அரசின் கடுமையான உழைப்பினால், கொரோனா வைரஸ் தொற்று பரவலின் சங்கிலியை உடைக்கும் முயற்சியில் ஓரளவு நல்ல பலன் கிடைத்துள்ளதாக மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
சென்னை:

தி.மு.க. தலைவரும் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் தொண்டர்களுக்கு எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:-

கொரோனா ஊரடங்கால் பாதிக்கப்பட்டுள்ள ஏழை-எளிய மக்களுக்கு ஏற்படும் இடர்பாடுகளைப்போக்கும் வகையில் தொடர் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. 

தமிழக அரசின் கடுமையான உழைப்பினால், கொரோனா வைரஸ் தொற்று பரவலின் சங்கிலியை உடைக்கும் முயற்சியில் ஓரளவு நல்ல பலன் கிடைத்துள்ளது. 

திருச்சி, தஞ்சை, சேலம் ஆகிய 3 மாவட்டங்களில் நாளை முதல் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளேன். இது முழுக்க முழுக்க அரசு முறை பயணம்.

எனவே என்னை சந்திக்க முயலுவதோ, அல்லது வரவேற்பு அலங்காரம் அமைக்கவோ கூடாது.

இவ்வாறு அவர் கூறி உள்ளார்.
Tags:    

Similar News