செய்திகள்
அணி கேப்டன்கள்

டிஎன்பிஎல் கிரிக்கெட்... டாஸ் வென்று பீல்டிங்கை தேர்வு செய்த மதுரை அணி

Published On 2021-07-22 14:20 GMT   |   Update On 2021-07-22 14:20 GMT
டிஎன்பிஎல் தொடரில் இன்றைய ஆட்டத்தில் டாஸ் வென்ற மதுரை அணி பீல்டிங்கை தேர்வு செய்தது.
சென்னை:

டிஎன்பிஎல் கிரிக்கெட் தொடரின் நான்காவது லீக் ஆட்டம் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இன்று தொடங்கியது. இதில் திண்டுக்கல் டிராகன்ஸ், மதுரை பாந்தர்ஸ் அணிகள் மோதுகின்றன. டாஸ் வென்ற மதுரை அணி, திண்டுக்கல் அணியை முதலில் பேட்டிங் செய்யும்படி அழைத்தது. அதன்படி திண்டுக்கல் அணி விளையாடி வருகிறது. துவக்க வீரர்களாக ஹரி நிஷாந்த், அருண் ஆகியோர் களமிறங்கினர்.

திண்டுக்கல் அணி வீரர்கள்: ராஜாமணி சீனிவாசன் (கேப்டன்), ஹரி நிஷாந்த், அருண், மோகித் ஹரிஹரன், மணி பாரதி (கீப்பர்), விவேக், சஞ்சய், சிலம்பரசன், குர்ஜாப்னீத் சிங், ரங்கராஜ் சுதேஷ், சுவாமிநாதன்.

மதுரை அணி வீரர்கள்: சதுர்வேத் (கேப்டன்), அருண் காத்திக் (கீப்பர்), ராஜ்குமார், அனிருத் சீதாராம், ஜெகநாதன் கவுசிக், ஷாஜகான், மிதுன், ராமலிங்கம் ரோகித், ஆர்.சிலம்பரசன், கிரண் ஆகாஷ், ஆயுஷிக் ஸ்ரீனிவாஸ்.
Tags:    

Similar News