செய்திகள்
வேலங்காடு மின்மயானம் 15-ந்தேதி வரை செயல்படாது- மாநகராட்சி தகவல்
வேலங்காடு மயான பூமியில் எரிவாயு தகன மேடை, புகைப் போக்கி மற்றும் மோட்டார் எந்திரம் பழுது ஏற்பட்டுள்ளது.
சென்னை:
சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-
சென்னை மாநகராட்சி, அண்ணாநகர் மண்டலம், வேலங்காடு மயான பூமியில் எரிவாயு தகன மேடை, புகைப் போக்கி மற்றும் மோட்டார் எந்திரம் பழுது ஏற்பட்டுள்ளது.
எனவே அதனை சீர் செய்யும் வகையில் இன்று முதல் 15-ந்தேதி வரை தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட உள்ளது.
மேலும் பராமரிப்பு பணிகள் நடைபெறும் நாட்களில் பொதுமக்கள் அருகில் உள்ள வில்லிவாக்கம் மற்றும் ஓட்டேரி எரிவாயு மயான பூமிகளை பயன்படுத்திக் கொள்ளுமாறு தெரிவித்துக்கொள்ளப்படுகிறது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.