வழிபாடு
கல்யாணவெங்கடேஸ்வரர் கோவிலில் அனுமன், யானை வாகன சேவை

கல்யாணவெங்கடேஸ்வரர் கோவிலில் அனுமன், யானை வாகன சேவை

Published On 2022-02-26 04:26 GMT   |   Update On 2022-02-26 04:26 GMT
சீனிவாசமங்காபுரம் கல்யாணவெங்கடேஸ்வரசாமி கோவிலில் வருடாந்திர பிரம்மோற்சவ விழாவின் 6-வது நாளில் உற்சவர் கல்யாண வெங்கடேஸ்வரர் யானை வாகனச் சேவையில் எழுந்தருளி அருள்பாலித்தார்.
திருப்பதியை அடுத்த சீனிவாசமங்காபுரம் கல்யாணவெங்கடேஸ்வரசாமி கோவிலில் வருடாந்திர பிரம்மோற்சவ விழா நடந்து வருகிறது. விழாவின் 6-வது நாளான நேற்று காலை அனுமன் வாகனச் சேவை நடந்தது. அதில் உற்சவர் கல்யாண வெங்கடேஸ்வரர், ‘கோதண்டராமர் அலங்காரத்தில்’ அனுமன் வாகனத்தில் எழுந்தருளி அருள்பாலித்தார்.

அதைத்தொடர்ந்து மாலை 3 மணியில் இருந்து மாலை 4 மணி வரை கல்யாண மண்டபத்தில் வசந்தோற்சவம் நடந்தது. பின்னர் இரவு 7 மணியில் இருந்து 9 மணிவரை யானை வாகனச் சேவை நடந்தது. அதில் உற்சவர் கல்யாண வெங்கடேஸ்வரர் எழுந்தருளி அருள்பாலித்தார்.
Tags:    

Similar News