செய்திகள்
உத்தரபிரதேசத்தில் 9 மருத்துவ கல்லூரிகள்- 30ந் தேதி பிரதமர் மோடி தொடங்கி வைக்கிறார்
சித்தார்த்நகரில் நடைபெறும் தொடக்க விழாவில் பிரதமர் மோடி பங்கேற்பார் என்று முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத் கூறினார்.
லக்னோ:
உத்தரபிரதேசத்தில் பிரதமர் மோடி வருகிற 30-ந் தேதி 9 மருத்துவ கல்லூரிகளை தொடங்கி வைக்கிறார் என மாநில அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளது.
கொரோனா தொடர்பான ஆய்வு கூட்டத்துக்கு தலைமை தாங்கிய முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத், சித்தார்த்நகரில் நடைபெறும் தொடக்க விழாவில் மோடி பங்கேற்பார் என்றும், 9 மாவட்டங்களில் கட்டப்பட்டுள்ள மருத்துவ கல்லூரிகளை அவர் தொடங்கி வைப்பார் எனவும் தெரிவித்தார்.
இதையும் படியுங்கள்... கொரோனா பாதிப்பு அதிகரிப்பு: கேரளாவில் 24, 25-ந் தேதிகளில் முழு ஊரடங்கு