செய்திகள்
கோப்புபடம்

ஆள் மாறாட்டம் செய்து கள்ள ஓட்டு போட முயன்றதாக 2 பேர் மீது வழக்கு

Published On 2021-04-08 14:03 GMT   |   Update On 2021-04-08 14:03 GMT
அரக்கோணம் அருகே ஆள் மாறாட்டம் செய்து கள்ள ஓட்டு போட முயன்றதாக 2 பேர் மீது போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
அரக்கோணம்:

அரக்கோணத்தை அடுத்த நரசிங்கபுரம் கிராமத்தில் நேற்று முன்தினம் வாக்குப்பதிவு நடைபெற்றுக்கொண்டிருந்தபோது பாண்டியன் மற்றும் லட்சுமணன் ஆகியோர் கள்ள ஓட்டு போட முயன்றதாக கூறப்படுகிறது. 

அவர்களைஅங்கிருந்தவர்கள் தடுத்தபோது 2 பேரும் வாக்குவாதம் செய்து கைகலப்பில் ஈடுபட்டதாக நரசிங்கபுரத்தை சேர்ந்த ஜெயவேல் என்பவர் அரக்கோணம் தாலுகா போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில்பாண்டியன் மற்றும் லட்சுமணன் ஆகியோர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Tags:    

Similar News