செய்திகள்
கைது

பேரூர் அருகே பெண்ணிடம் தவறாக நடக்க முயன்ற பெயிண்டர் கைது

Published On 2021-11-24 10:59 GMT   |   Update On 2021-11-24 10:59 GMT
கோவை பேரூர் அருகே பெண்ணிடம் தவறாக நடக்க முயன்றது தொடர்பாக பெயிண்டரை போலீசார் கைது செய்தனர்.
கோவை:

கோவை பேரூரை சேர்ந்தவர் 41 வயது பெண். இவருக்கு திருமணமாகி கணவர் மற்றும் குழந்தைகள் உள்ளனர்.

சம்பவத்தன்று இவர் அந்த பகுதியில் உள்ள தனது சகோதரி வீட்டிற்கு சென்றார். பின்னர் வீட்டிற்கு நடந்து சென்று கொண்டு இருந்தார். நால்வர் மண்டபம் அருகே சென்ற போது அதே பகுதியில் வசித்து வரும் பெயிண்டர் நாகராஜ் (வயது 23) என்பவர் அங்கு வந்தார். அவர் அப்பெண் கையை பிடித்து இழுத்து அந்த பகுதியில் உள்ள புதருக்குள் சென்றார்.

பின்னர் அவரது சேலையை இழுத்து தவறாக நடக்க முயன்றார். இதில் அதிர்ச்சியடைந்த அப்பெண் சத்தம் போட்டார். உடனடியாக வாலிபர் நடந்த சம்பவத்தை வெளியே சொன்னால் கொலை செய்து விடுவதாக மிரட்டி விட்டு அங்கு இருந்து தப்பிச் சென்றார்.

இதுகுறித்து அப்பெண் பேரூர் போலீசில் புகார் செய்தார்.

புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். பின்னர் அப்பெண்ணை புதருக்குள் இழுத்து சென்று தவறாக நடக்க முயன்ற பெயிண்டர் நாகராஜை கைது செய்தனர். பின்னர் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
Tags:    

Similar News