உள்ளூர் செய்திகள்
திருப்பூர் மாநகர் பகுதியில் நாளை குடிநீர் விநியோகம் நிறுத்தம்
மாநகராட்சிக்கு உள்பட்ட பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் பிற்பகல் 1 மணி வரையில் குடிநீர் விநியோகம் நிறுத்தம் செய்யப்படுகிறது.
திருப்பூர்:
மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் நாளை 6-ந்தேதி (திங்கட்கிழமை ) காலை 9 மணி முதல் பிற்பகல் 1 மணி வரையில் குடிநீர் விநியோகம் நிறுத்தம் செய்யப்படவுள்ளது.
இதுகுறித்து மாநகராட்சி ஆணையர் கிராந்திகுமார் பாடி வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் கூறியிருப்பதாவது:-
திருப்பூர் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் மூன்றாவது குடிநீர்த்திட்டத்தின் கீழ் குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.
இந்நிலையில் பவானியில் உள்ள தலைமை நீரேற்று நிலையத்தில் மின்பராமரிப்புப்பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது. ஆகவே மாநகராட்சிக்கு உள்பட்ட பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் பிற்பகல் 1 மணி வரையில் குடிநீர் விநியோகம் நிறுத்தம் செய்யப்படுகிறது.
அதேவேளையில் மாநகராட்சி பகுதிகளில் செவ்வாய்க்கிழமை முதல் தடையின்றி குடிநீர் விநியோகம் செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.