உள்ளூர் செய்திகள்
கோப்புபடம்.

திருப்பூர் மாநகர் பகுதியில் நாளை குடிநீர் விநியோகம் நிறுத்தம்

Published On 2021-12-05 09:45 GMT   |   Update On 2021-12-05 09:45 GMT
மாநகராட்சிக்கு உள்பட்ட பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் பிற்பகல் 1 மணி வரையில் குடிநீர் விநியோகம் நிறுத்தம் செய்யப்படுகிறது.
திருப்பூர்:

மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் நாளை 6-ந்தேதி (திங்கட்கிழமை ) காலை 9 மணி முதல் பிற்பகல் 1 மணி வரையில் குடிநீர் விநியோகம் நிறுத்தம் செய்யப்படவுள்ளது. 

இதுகுறித்து மாநகராட்சி ஆணையர்  கிராந்திகுமார் பாடி வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் கூறியிருப்பதாவது:-

திருப்பூர் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் மூன்றாவது குடிநீர்த்திட்டத்தின் கீழ் குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. 

இந்நிலையில் பவானியில் உள்ள தலைமை நீரேற்று நிலையத்தில் மின்பராமரிப்புப்பணிகள்  மேற்கொள்ளப்பட உள்ளது. ஆகவே மாநகராட்சிக்கு உள்பட்ட பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் பிற்பகல் 1 மணி வரையில் குடிநீர் விநியோகம் நிறுத்தம் செய்யப்படுகிறது. 

அதேவேளையில் மாநகராட்சி பகுதிகளில் செவ்வாய்க்கிழமை முதல் தடையின்றி குடிநீர் விநியோகம் செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.  
Tags:    

Similar News