செய்திகள்
கைது

சரக்கு ஆட்டோவில் கொண்டு வந்த 565 புகையிலை பாக்கெட்டுகள் பறிமுதல்- டிரைவர் கைது

Published On 2021-09-11 15:41 GMT   |   Update On 2021-09-11 15:41 GMT
கூடலூர் பஸ் நிலையம் பகுதியில் போலீசார் வாகன தணிக்கை செய்து கொண்டு இருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த ஒரு சரக்கு ஆட்டோவை நிறுத்தி சோதனை செய்தனர்.
கூடலூர்:

கூடலூர் பஸ் நிலையம் பகுதியில் போலீசார் வாகன தணிக்கை செய்து கொண்டு இருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த ஒரு சரக்கு ஆட்டோவை நிறுத்தி சோதனை செய்தனர். அதில் தடை செய்யப்பட்ட 565 புகையிலை பாக்கெட்டுகள் இருப்பது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து புகையிலை பாக்கெட்டுகளை போலீசார் பறிமுதல் செய்தனர். தொடர்ந்து இது தொடர்பாக கூடலூரை சேர்ந்த டிரைவர் செந்தில்குமார்(வயது 40) என்பவரை கைது செய்தனர். மேலும் சரக்கு ஆட்டோவையும் பறிமுதல் செய்தனர்.
Tags:    

Similar News