செய்திகள்
இந்திய அணி வீரர்கள்

இந்திய அணி முதல் இன்னிங்சில் 345 ரன்களுக்கு ஆல் அவுட்

Published On 2021-11-26 07:15 GMT   |   Update On 2021-11-26 07:15 GMT
இந்திய அணிக்கெதிரான முதல் டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்சில் நியூசிலாந்து அணி வீரர் டிம் சவுத்தி 5 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.
கான்பூர்:

இந்திய நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி நேற்று தொடங்கியது. கான்பூரில் நடைபெறும் இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்து ஆடியது.

நேற்றைய ஆட்ட நேர முடிவில் இந்திய அணி 4 விக்கெட் இழப்பிற்கு 258 ரன்கள் எடுத்திருந்தது. 2-ம் நாள் ஆட்டம் இன்று தொடங்கியது. ஜடேஜா 50 ரன்னில் சவுத்தி பந்து வீச்சில் அவுட் ஆனார். அறிமுக போட்டியில் ஷ்ரேயாஸ் அய்யர் சதம் அடித்து முத்திரை பதித்தார். இந்திய வீரர்களில் அறிமுக போட்டியில் சதம் அடித்த 16-வது வீரர் இவர் ஆவார்.

அவர் 105 ரன்கள் எடுத்து வெளியேறினார். சீரான இடைவேளியில் இந்திய அணி விக்கெட்டுகளை இழந்தது. சகா 1, அக்சர் 3, அஸ்வின் 38, இஷாந்த் 0 என வெளியேறினர். உமேஷ் யாதவ் 10 ரன்கள் எடுத்து ஆட்டம் இழக்காமல் களத்தில் இருந்தார்.

நியூசிலாந்து அணி தரப்பில் சவுத்தி 5 விக்கெட்டும், ஜேமிசன் 3 விக்கெட்டும், படேல் 2 விக்கெட்டும் வீழ்த்தினர். இதனையடுத்து நியூசிலாந்து அணி முதல் இன்னிங்சை ஆடி வருகிறது.

Tags:    

Similar News