செய்திகள்

அன்று வெற்றியை கொண்டாடிய ரசிகன், இன்று ஒரு வீரன்: ஹர்திக் பாண்டியா

Published On 2019-05-24 12:16 GMT   |   Update On 2019-05-24 12:16 GMT
2011-ம் ஆண்டு இந்திய அணி உலகக்கோப்பையை வென்றபோது நான் ரசிகனாக கொண்டாடினேன். தற்போது இந்திய அணியில் இடம்பிடித்துள்ளேன் என்று ஹர்திக் பாண்டியா தெரிவித்துள்ளார்.
இந்திய அணியின் வேகப்பந்து வீச்சு ஆல்ரவுண்டர் ஹர்திக் பாண்டியா. 2016-ம் ஆண்டு இந்திய அணியில் அறிமுகமானார். தற்போது முன்னணி வேகப்பந்து வீச்சு ஆல்ரவுண்டராக உள்ளார். உலகக்கோப்பைக்கான 15 பேர் கொண்ட இந்திய அணியில் இடம்பிடித்துள்ளார்.

25 வயதாகும் இவர், ‘‘2011-ம் ஆண்டு இந்திய அணி உலகக்கோப்பையை வென்றபோது நண்பர்களுடன் வெற்றியை கொண்டாடினேன். தற்போது இந்திய அணியில் இடம்பிடித்து விளையாட இருக்கிறேன். எனது கனவு நனவாகியுள்ளது’’ என்று டுவிட் செய்துள்ளார்.
Tags:    

Similar News