உள்ளூர் செய்திகள்
ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றவர்கள்.

எஸ்.டி.பி.ஐ., கட்சியினர் ஆர்ப்பாட்டம்

Published On 2022-04-16 11:12 GMT   |   Update On 2022-04-16 11:12 GMT
எஸ்.டி.பி.ஐ., கட்சியின் ஊடக அணி மாவட்ட தலைவர் எஸ்.அப்பாஸ் கண்டன கோஷங்களை எழுப்பினார்.
மங்கலம்:

திருப்பூர் மாவட்டம் மங்கலத்தில் எஸ்.டி.பி.ஐ., கட்சியின் சார்பில் பெட்ரோல்,டீசல் விலை உயர்வை கண்டித்தும் சொத்து வரி உயர்வை கண்டித்தும் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆர்ப்பாட்டத்திற்கு பல்லடம் தொகுதி தலைவர் யாசர் அரபாத்  முன்னிலை வகித்தார். ஆர்ப்பாட்டத்தில் எஸ்.டி.பி.ஐ., கட்சியின் ஊடக அணி மாவட்ட தலைவர் எஸ்.அப்பாஸ் கண்டன கோஷங்களை  எழுப்பினார். ஆர்ப்பாட்டத்தில் என்.ஹாரிஸ் பாபு கண்டன உரையாற்றினார். ஜாபர் சாதிக் நன்றி கூறினார்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் எஸ்.டி.பி.ஐ., கட்சியின் திருப்பூர் தெற்கு மாவட்ட பொதுச் செயலாளர் மன்சூர் கான்,செயலாளர் ஹக்கீம். பாப்புலர் ப்ரண்ட் ஆப் இந்தியா மாவட்ட செயலாளர் ரபீக் முஹம்மது, மற்றும் எஸ்.டி.பி.ஐ கட்சியின் தொகுதி செயலாளர் ரஹ்மத்துல்லாஹ், தொகுதி துணைத் தலைவர் அபுதாஹிர், எஸ்.டி.பி.ஐ.,கட்சியின் மகளிரணி மாவட்டத்தலைவர் சஹனா ஆகியோர் கலந்து கொண்டனர்.
Tags:    

Similar News